என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எஸ்பிஐ வங்கி"
- தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
- தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது.
புதுடெல்லி:
தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் சிறப்புவாய்ந்த தீர்ப்பை வழங்கியது.
மேலும், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலமாக பெற்றுள்ள தொகை குறித்த விவரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ம் தேதிக்குள் தனது இணைய தளத்தில் அந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றன.
இதற்கிடையே, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி வேண்டுகோள் வைத்துள்ளது.
இந்நிலையில், அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, எஸ்.பி.ஐ. வங்கி லோகோவில் பிரதமர் மோடி தெரிவது போல் எக்ஸ் தளத்தில் எஸ்.பி.ஐ. யாரை காப்பாற்ற நினைக்கிறது என கேள்வி எழுப்பி படம் வெளியிட்டது வைரலாகி வருகிறது.
- நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.
- வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.
மும்பை:
கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று 'சாக்லேட்' அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.
அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
அதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லேட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் சில்லரை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் சில்லரைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்